சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை துகிலுரிக்கும் அடுத்தகட்ட நகர்வு!
ஜூன் 30th, 2011 § 1 மறுமொழி
சிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை துகிலுரிக்கும் அடுத்தகட்ட நகர்வு!
பெங்களூரில் ஜூலை 2 இல் சிங்களப்பேரினவாதத்தின் இனப்படுகொலை குறித்த செய்திகளை விளக்கும் பொருட்டு மனித உரிமை அமைப்புகள் மற்றும் இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பினால் நிகழ்வு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. சேனல்-4 வெளியிட்ட இனப்படுகொலை குறித்த ஆவணங்களை திரையிடல் மூலம் மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கி திருப்புவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
Save-tamils தோழர்களின் பல்வேறு முயற்சிகளின் பலனாக இலங்கை அரசின் இனபடுகொலைகளுக்கு எதிரான அமைப்பொன்றை இந்தியாவில் வசிக்கும் பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்போடு உருவாக்கி இருக்கிறார்கள். தமிழர்களிடையே மாத்திரம் விவாதிக்கப்பட்டு வந்த இலங்கை அரசின் இனவெறி இந்தியாவில் வசிக்கும் பிற தேசிய இனங்களின் செவிகளில் ஒலிக்க இந்நிகழ்வு ஒரு துவக்க புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறேன். பெங்களூர் வாழ் தோழர்கள் இந்த செய்தியை பரவலாக்குவதோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக்கிட வேண்டிக்கொள்கிறேன், அது நமது கடமையும் கூட! .

நன்றி சொல்லி உன்னை என்னிடம் இருந்து பிரிக்க மனமில்லை என் நண்பனே…