சிரிப்பொலி தொடந்து பார்க்காதீங்க ஸ்டாலின்!
ஆகஸ்ட் 1st, 2011 § 9 மறுமொழிகள்
சிரிப்பொலி தொடந்து பார்க்காதீங்க ஸ்டாலின்!
கடந்த வாரம் ரெக்கை கட்டி பறந்த முக்கிய செய்தி ஸ்டாலின் கைதும் அதனை தொடந்து கலைஞர் தொலைக்காட்சி ஊதிப்பெருக்கிய செய்திகளும்தான்.
கடந்த சனிக்கிழமை(30-07-2011) கலைஞர் தொலைக்காட்சியில் ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஸ்டாலின் கைது என்று செய்தி வந்துகொண்டு இருந்தது. கைது செய்யப்பட்ட ஸ்டாலின் இதோ பேசிகிறார் என்றார்கள்.
அலைபேசியில் ஸ்டாலின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த உறையை ஆற்றினார் ” நாங்க திருவாரூர் போயிட்டு வந்திட்டு இருந்தோம் இடையில் இருநூறு போலிஸ் இருப்பாங்க அப்படியே வண்டிய மறிச்சு கலைவாணனை கைது செய்யனும்னு சொன்னாங்க என்ன அடிப்படையில் என்று கேட்டேன். அதற்கு என்னையும் ஜீப்பில ஏத்திட்டாங்க. எங்க கொண்டுட்டு போறாங்கன்னு தெரியல. நான் மறியல் பண்ணுனதா சொல்லுறாங்க ஆனா மறியல் பண்ணியது காவல்துறைதான்” என்று முடித்துக்கொண்டார்.
ஆனால் அரசு தரப்பில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும் தானாகவே ஜீப்பில் ஏறிக்கொண்டார் ஸ்டாலின் திருவாரூர் வந்ததும் கலைவாணன் தவிர அனைவரையும் விட்டுவிட்டோம் என்றளவில் செய்திவந்தது. என்னடா இது தளபதி தலைநகரம் வடிவேல் அளவில் காமெடி செய்திட்டு இருக்காரே? என்று பார்த்தால் அன்று மாலை வக்கீல் வண்டு முருகன் ஸ்டைலில் பொதுக்கூட்ட பேச்சு.
“எங்கள் கட்சி தொண்டர்களின் உடலில் குண்டு மணி அளவில் இரத்தம் வந்தால் கூட எதிர்கட்சிகாரர்களின் தலைகள் தோரணம் கட்டி தொங்கவிடப்படும்” என்பதை மாற்றி ஒரு “திமுக தொண்டனை கூட கைது செய்ய அனுமதிக்க மாட்டோம்” என்று சொல்லி இருக்கிறார்.
பாவம்யா வடிவேலு தமிழ்நாட்டு மக்களை கவலை மறந்து சிரிக்கவைத்துகொண்டிருந்தார் . அவரு பொழைப்புல மண்ணைப்போட்டு கடந்ததேர்தல் பிரச்சாரத்துல இறக்கிவிட்டு ஒருவழியா காலிபண்ணியது போதாதென்று இப்போ ஸ்டாலினே நேரடியாக களத்துல இறங்கி வடிவோலோட புகழ்பெற்ற காமெடிகளை நடைமுறைப்படுத்திட்டு இருக்கார்.
சேலம் வீரபாண்டி ஆறுமுகம் போன்ற வாழும் மகாத்மாக்கள் மீது அவதூறு புகார்களாம். அதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டாங்களாம். அண்ணே இன்னும்மான்னே ஊரு உங்கள நம்புது. “நான் செயிலுக்கு போறேன் செயிலுக்கு போறேன்” காமெடி உங்களுக்கு வேணும்னா புதுசா இருக்கலாம் மக்களுக்கு பழசுன்னே!

நான் செயிலுக்கு போறேன் செயிலுக்கு போறேன்”
சிரிப்பொலி பத்தி சொல்லவே இல்ல?
சிறுவனின் மரணத்திற்கு காரணம் என்பதால்தான் அந்த கைது! அதையும் சேர்த்து இருக்கலாமே?
சாலை விபத்தில் இறந்ததாக தொடந்து கலைஞர் தொலைக்காட்சி கூவி கொண்டிருக்கிறது. பணம் கொடுத்து சரி செய்துவிடும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கலாம். எதற்க்காக இறந்த மாணவனின் வீட்டிற்கு சென்றோம் என்றும் தெளிவாக அவர்கள் கூறவில்லை.உறுதிபடுத்திய பின்பு பதியலாம் என்று விட்டுவிட்டேன்
Simply Superb
உங்கள் பதிவு நன்றாக இருந்தது
hot tamil movies
தமிழன்பா…கலக்குங்க…
சிரிப்பொலியில் போட வேண்டிய நிகழ்ச்சியை தவறுதலா ஒளிபரப்பிட்டாங்க அய்யா! கலைஞர் தொலைக்காட்சி
அடுத்து கருனானிதி தலைமையில் திருவாரூரில் ஆர்ப்பாட்டமாம். பேசாம திருவாரூர் முதல்வராக அவரை ஆக்கிவிட்டால் அடங்கி விடுவாரோ.