போன மச்சான் திரும்பி வந்தான்!
மே 23, 2009 § பின்னூட்டமொன்றை இடுக
போன மச்சான் திரும்பி வந்தான்!
இலங்கை விவகாரத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் ‘திருப்தி’ அளிப்பதாக திருவாய் மலர்ந்த தமிழின தலைவர் சீட்டு பேரத்தில் திருப்திக்கு பதிலாக காங்கிரஸ் ‘திருப்பதி’ அளிப்பதாக கூறி சென்னைக்கு டிக்கெட்டு போட்டு இருக்கிறார்.
வெளியே இருந்து ஆதரவு என்பதன் மூலம் கூட்டணிக்கு உள்ளே இருந்து எதிர்ப்பு என்பது தெளிவாகிறது. நாளைக்கு முரசொலியில் இதுபத்தி உடன்பிறப்பிற்கு விளாவரியாக கவிதை எழுதி கண்ணீர் விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன செய்யபோகிறார் வாழும் வள்ளுவர் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் எப்படியாவது பேரம் பேசி மறுபடியும் சீட்டு பிடிப்பார் என்று ஒரு பேச்சு இருக்கிறது.
இப்போதைக்கு போன மச்சான் திரும்பி வந்தான் கோவணத்தோட என்று தெளிவாகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்